தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571-லிருந்து 621-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571லிருந்து 621ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571-லிருந்து 621-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 91,851 பேர் உள்ளதாகவும், இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை