வதந்திகள் மூலம் ஒற்றுமையை கலைப்போர் மீது தண்டனை மிக கடுமையாக இருக்கும்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
வதந்திகள் மூலம் ஒற்றுமையை கலைப்போர் மீது தண்டனை மிக கடுமையாக இருக்கும்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மும்பை: போலியான வீடியோக்களின் மூலம் மத ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவோரை தண்டிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன் என நேற்று உத்தவ் தாக்கரே வெளியிட்ட காணொளிப் பதிவில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3374 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் மக்களிடம் வெறுப்பைத் தூண்டும் வகையில் பரவும் காணொளிகள் மற்றும் ஆடியோக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மும்பை போலீஸ் கமிஷ்னர், அவை குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, மகாராஷ்டிராவில் சுமார் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களுள் இதுவரை 51 பேர் குணமடைந்துள்ளனர் எனும் தகவலை உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். அத்தோடு, கொரோனாவுக்காக பிரத்யேகமாக பல சோதனை மையங்களும் மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்பது நம்முடைய கைகளில்தான் உள்ளது என்று கூறிய தாக்கரே, மாநிலத்தில் அசாதாரணமான சூழல் நிலவுவதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை அரசியல், விளையாட்டு, மதம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

மூலக்கதை