கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கு ரூ.75 கோடி ஒதுக்கீ தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக போலீசாருக்கு 33 நாட்களுக்கு தலா ரூ.250 உணவுப்படியாக ரூ.8,250 வழங்கவும், தற்காலிக தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்க ரூ.22.57 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.