ஊரடங்கை பின்பற்றி வீட்டில் இருந்தே பொருட்களை வாங்கினால் பரிசு வழங்கப்படும்..: திண்டுக்கல் மாநகராட்சி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஊரடங்கை பின்பற்றி வீட்டில் இருந்தே பொருட்களை வாங்கினால் பரிசு வழங்கப்படும்..: திண்டுக்கல் மாநகராட்சி அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஊரடங்கை பின்பற்றி வீட்டில் இருந்தே பொருட்களை வாங்கினால் ஃபிரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு வழங்கப்படும் என்று திண்டுக்கல் மாநகராட்சி அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் பரிசாக ஃபிரிட்ஜ், 2-ம் பரிசாக பீரோ மற்றும் 3-ம் பரிசாக குக்கர் தரப்படும். மேலும் தனிநபர் இடைவெளியை பின்பற்றினால் சிறப்பு பரிசாக 108 பேருக்கு சேலை வழங்கப்படும் என திண்டுக்கல் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மூலக்கதை