ஒருபுறம் கொரோனா தடுப்பு பணியும் மறுபுறம் அதை எதிர்கொள்ளவும் அரசு நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ராஜீவ் காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளிலும் கொரோனா தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். ஒருபுறம் கொரோனா தடுப்பு பணியும் மறுபுறம் அதை எதிர்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தை நலமாக இருக்கிறது என தெரிவித்தார்.