கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, ரூ.4000 கோடி கோரிய நிலையில், தற்போதைய சூழ்நிலைக்கு ரூ.9000 கோடி தேவை என கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.