தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படாத விடுதிகள், வீடுகள் இருந்தால் மாநகராட்சிக்கு வழங்கி உதவலாம்: ஆணையர் பிரகாஷ்
சென்னை: தனிமைப்படுத்தல் இடங்கள் அதிகம் தேவை என்பதால் விடுதிகள், வீடுகள் இருந்தால் உதவலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பயன்படுத்தப்படாத விடுதிகள், வீடுகள் இருந்தால் மாநகராட்சிக்கு வழங்கி உதவலாம். அவசரமான காலத்தில் உதவும் பட்சத்தில் பேருதவியாக இருக்கும் எனவும் கூறினார்.