இந்துக்களின் ஒரே நாடு இந்தியா: டி.வி.நிகழ்ச்சியில் ரஜினி கருத்து

தினமலர்  தினமலர்
இந்துக்களின் ஒரே நாடு இந்தியா: டி.வி.நிகழ்ச்சியில் ரஜினி கருத்து

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர்ல் கிரிஸ் உடன் இன் டு தி வைல்ட் என்ற நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் அடர்ந்த காட்டின் வழியா சாகச பயணம் மேற்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஒளிபரப்பானது. இந்த பயணத்தில் பியர்ல் கிரிஸ் ரஜினியிடம் பல கேள்விகள் கேட்டார். அதற்கு ரஜினி அளித்த பதில்களின் சுருக்கம் வருமாறு:

எனது ஆசை என்னவென்றால்...இந்தியாவில் ஏழ்மையைப் போக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க வேண்டும். இந்தியா கலாச்சார ரீதியாக, மத ரீதியாக மிகவும் வளமான நாடு. பொருளாதார ரீதியாகவும் வளமான நாடாக மாற வேண்டும். அதுதான் என் கனவு.

இந்த நாட்டில் நான்கு முக்கிய மதங்கள் இருக்கின்றன. இஸ்லாம், கிறிஸ்துவம், பவுத்தம், இந்து. இவற்றில் இஸ்லாம், பவுத்தம், கிறிஸ்துவத்துக்கென நிறைய நாடுகள் உள்ளன. ஆனால் இந்துக்களுக்கு ஒரு நாடுதான் உள்ளது. அதுதான் இந்தியா. நேபாளம் என்ற சிறிய ராஜ்ஜியம் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி நாம் இங்கு வாழ்கிறோம்.

எல்லா மதங்களையும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் நாடு இந்தியா மட்டுமே. இதுதான் இந்த தேசத்தின் மிகப்பெரிய நற்குணம். இந்த நாட்டின் சகிப்புத்தன்மை, இதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

பஞ்சபூதம் என்று சொல்கிறோமே, நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என இந்த பஞ்சபூதங்களையும் இந்துக்கள் இந்தியாவில் கடவுளாக வணங்குகிறார்கள். மரம், பாறைகள், நதிகள் என அனைத்தையும் கடவுளாகப் பார்க்கிறார்கள். இது ஒரு சிறந்த கலாச்சாரம்.

இவ்வாறு ரஜினி கூறினார்.

மூலக்கதை