மத்திய அரசு ஊழியர்கள் அரசு இல்லத்தை காலி செய்ய அவகாசம்

தினகரன்  தினகரன்
மத்திய அரசு ஊழியர்கள் அரசு இல்லத்தை காலி செய்ய அவகாசம்

புதுடெல்லி: கொரேனாா தாக்குதலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் தங்கியிருந்த அரசு இல்லத்தை காலி செய்வதற்கான அவகாசம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி விவகாரம அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் ` கொரோனாவுக்காக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்தநிலையில் ஏற்கனவே உத்தரவிடப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் தாங்கள் தங்கியுள்ள அரசு இல்லங்களில் இருந்து வெளியேறுவதற்கான கால அளவை மார்ச் 17ல் இருந்து மே 31 வரை அவகாசம் அளித்து உத்தரவிடப்படுகிறது\' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை