கொரோனா முன்னெச்சரிக்கை: மருத்துவ பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படும்...ஒடிஷா முதல்வர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா முன்னெச்சரிக்கை: மருத்துவ பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படும்...ஒடிஷா முதல்வர் அறிவிப்பு

ஒடிஷா: ஒடிஷா மாநிலத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிஷாவில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் 4 மாத ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை  தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மருத்துவர்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில் ஒரிசாவில் மருத்துவர்களுக்கு அம்மாநில அரசு அதிரடியாக இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பாக ஒடிஷா அரசு கொரோனா பரவலை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. தற்போது அந்த மாநில மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை