கொரோனா பரவுவதை தடுக்க ஆன்லைன் மூலமாக மின் கட்டணம்: மின்வாரியம் அறிவுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பரவுவதை தடுக்க ஆன்லைன் மூலமாக மின் கட்டணம்: மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மின் நுகர்வோர் முடிந்த வரையில்  ஆன்லைன் மூலமாக பணம்  செலுத்தும்படி மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் கிருமிகள் பரவுவதை தடுக்க, மின் நுகர்வோர் முடிந்த வரையில் ஆன்லைன் www. tangedco. gov. in மூலமாக அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் பணம் செலுத்தும்படி கேட்டுகொள்ளப்படுகிறது.

இதன் மூலம் பணம் செலுத்தும் மையத்தில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். பொது மக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தொலைபேசி மூலமாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோ (இலவச எண்-1912) உதவி பொறியாளர்கள்/ உதவி செயற்பொறியாளர்களின் தொலைபேசி எண்களை இணையதளம் மூலமாக அறிந்து குறைகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து மின்வாரிய பணம் செலுத்தும் இடங்களிலும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்திடவும், கொரேனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் முழுமையாக கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு எற்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை