கொரோனா பாதிப்பு எதிரொலி: 829 கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பாதிப்பு எதிரொலி: 829 கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 829 கப்பல்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து வரும் அனைத்து கப்பல்களுக்கும் மார்ச் 31ம்  தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், 829 கப்பல்கள் நாட்டிற்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.

அக்கப்பல்களில் உள்ள 29,058 பயணிகளுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும்.

அவர்களுக்குக் காய்ச்சல், உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

.

மூலக்கதை