டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை : உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

தினகரன்  தினகரன்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை : உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனு விசாரணையை ஏப்ரல் 6ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு தங்களது வாதத்தில்,\'டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான புலன் விசாரணை முடிந்து 6 அறிக்கையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி  தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் \'உள்ளிட்டவற்றை முன்வைத்தனர். 

மூலக்கதை