இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி; இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியன்2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி; இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார். சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் இடைவேளையின்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை