டெல்லி கலவர பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
டெல்லி கலவர பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 38 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்வது வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட வன்முறையில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என  அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்காக கலவரப்பகுதிகளி–்ல மட்டுமின்றி பிற இடங்களிலும் டிரோன்கள் மூலம் போலீசார் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். நகரில் குவிக்கப்பட்டுள்ள  போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் மரண ஓலம்தான் கேட்கிறது. பலர் தங்கள் உறவுகளின் உடல்களை பெறுவதற்காக சவக்கிடங்கு முன்பாக காத்து கிடக்கும் அவலத்தையும் பார்க்க முடிகிறது. இந்த  கலவரத்தில் பலர் தங்களது குடும்பத்தினரின் உறவுகளை இழந்த நிலையில், இன்னும் பலர் தங்களது வீடுகள், கடைகளை இழந்து வாழ்வாதாரம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலீசார் தரப்பிலும் பலர் பாதிக்கப்பட்டு  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கலவரம் குறித்து விசாரிக்க இரண்டு சிறப்பு விசாரணை குழுக்களை டெல்லி போலீசார் தரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 48 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 130 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.இதற்கிடையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் நேற்று நடத்தப்பட்ட ரத்த தான முகாமில் கலந்து கொண்டு துணை ராணுவப்படையினர் 1,300 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கியது, அங்கிருந்தவர்களை ெநகிழ்ச்சி அடையச் செய்தது.முஸ்லிம்களுக்கு உதவிய இந்துக்கள்வடகிழக்கு டெல்லி அஷோக் நகர் பெரிய மசூதி அருகே செவ்வாய் மதியம் ஒரு மணிக்கு வன்முறை விஸ்வரூபம் எடுத்தது. பயங்கர ஆயுதங்களுடன் வந்த வன்முறை கும்பல் சூறையாடியதில், 40க்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் வீடு,  வாசல் இழந்தன. அவர்களது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையானது. உயிர் பயத்துடன் குழந்தைகளை இறுகப் பிடித்துக் கொண்டும், வயதான பெற்றோரை எப்படி பாதுகாப்பது என தெரியாமலும், கதிகலங்கி வீதியில் நின்ற அந்த  குடும்பங்களை, ‘‘பிரச்னை ஓயும் வரை எங்கேயும் செல்ல வேண்டாம். பிர்னை ஓயும் வரை எங்கள் வீடுகளில் தங்கிக் கொள்ளுங்கள்,’ என அஷோக் நகர் இந்து குடும்பங்கள் அடைக்கலம் அளித்துள்ளன என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மூலக்கதை