கோவையில் ஓ.பி.எஸ்சுக்கு ஆயுர்வேத சிகிச்சை

தினகரன்  தினகரன்
கோவையில் ஓ.பி.எஸ்சுக்கு ஆயுர்வேத சிகிச்சை

கோவை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் கோவை வந்தார். பின்னர் கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்று இரவில் தங்கினார். அங்கு  அவருக்கு ஆயில் மசாஜ், நீராவி மற்றும் எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உடல் புத்துணர்வு பெறுவதற்காக கோவையில் அவர் சில நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை பெற இருப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு 3 முறை வந்துள்ளார். தற்போது 4வது  முறையாக ஆயுர்வேத சிகிச்சைக்காக கோவை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை