அரியானாவில் பாஜ அரசுக்கு சுயேச்சை ஆதரவு வாபஸ்
சண்டிகர்: அரியானில் சர்க்கரை ஆலை ஊழல் தொடர்பாக எம்எல்ஏ பல்ராஜ் காண்டு அரசிடம் பல்வேறு புகார் அளித்தார். இது தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் கூட்டத்தொடரிலும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் கட்டார், ‘குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை, தனிப்பட்ட விரோதத்தின் மூலம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் விசாரணை நடத்த உத்தரவிட முடியாது,’ என தெரிவித்தார்.இதனால் அதிப்தி அடைந்த பல்ராஜ், பாஜ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார். இதுதொடர்பாக ஆளுநர், சபாநாயகரிடம் முறைப்படி கடிதம் கொடுத்தார். எனினும் பல்ராஜ் ஆதரவு வாபசால் பாஜ கூட்டணிக்கு அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.