சேலத்தில் உள்ள கோயில்களின் சொத்துக்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.. அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை: சேலத்தில் உள்ள கோயில்களின் சொத்துக்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் கோயில்களின் சொத்துக்களை குத்தகைக்கு எடுத்து முறைகேடாக வருமானம் ஈட்டுவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது. 2017-ல் சுகனேஷ்வரர் ஆலயத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முறைகேடு தெரிய வந்தது எனவும் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.