ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு பின் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்போன் சேவை மீண்டும் தொடக்கம்

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு பின் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்போன் சேவை மீண்டும் தொடக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் அட்டூழியம் அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய அல்-கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனையும், அவர்களுக்கு ஆதரவளித்த தலிபான்களையும் ஒடுக்க அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ல் இறங்கியது. அதே சமயம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது. பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.  தொலைதொடர்பு  சேவைகள் இல்லாமல் மக்கள் தவிப்பு மேலும், தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களை சேதப்படுத்தியும், அங்கு பணிபுரியும் நபர்களை கடத்தி கொலை செய்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவந்தனர். இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்  செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்த முடியாமல் தவித்துவந்தனர். 2001 முதல் நடைபெற்றுவரும் இந்த உள்நாட்டு போரில் தலிபான் பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர்மீண்டும் செல்போன் சேவை இந்நிலையில் தலிபான்கள், அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளுக்கு இடையே ஒரு வாரம் காலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் வன்முறை அரங்கேறியுள்ளது. மிகப்பெரிய தாக்குதல் எதுவும் நடைபெறாத நிலையில், வன்முறை குறைந்துள்ளதை காண முடிவதாக உள்துறை அமைச்சர் மசூத் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுமார் 730 செல்போன் கோபுரங்கள் 5 ஆண்டுகளுக்கு பிறகு செயல்பாட்டிற்கு வந்துள்ளன. நாடு முழுவதும் செல்போன் சேவை கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூலக்கதை