வங்கி கேஷியர் வலையில் பெண்கள் சிக்கியது எப்படி?.. பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கி கேஷியர் வலையில் பெண்கள் சிக்கியது எப்படி?.. பரபரப்பு தகவல்கள்

தஞ்சை: திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான்தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது தாய் லில்லிஹைடா, தங்கைக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.
எட்வினின் வீடு தரைதளம், மாடி என 2 தளங்களை கொண்டது.

கீழ் தளத்தில் ரீட்டா என்பவர் வசித்து வந்தார். இவர் எட்வினுக்கு சித்தி முறை வேண்டுமாம்.

அவருக்கு வேறு யாரும் இல்லை. எனவே அவர் எட்வின் வீட்டின் மாடியிலேயேதான் எப்போதும் இருந்து வந்தார்.

அங்கேயே தான் சாப்பிட்டும் வந்துள்ளார். எட்வினுக்கும், தஞ்சை வல்லம் அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடந்தது.

முதலிரவு அறைக்கே இரவில் எட்வின் வரவில்லையாம். அவரது அறையிலேயே கிடந்தாராம்.

இது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில், எட்வின் அறையை மனைவி ஆராய்ந்துள்ளார்.

எட்வின் படுக்கையில் 15 செல்போன்கள் பரவி கிடந்தது.

ஒவ்வொரு போனையும் எடுத்து படம் பார்ப்பதும், அடிக்கடி சிரித்து சிரித்து பேசுவதுமாக எட்வின் இரவில் பொழுதைக் கழிப்பது தெரியவந்தது.
எட்வினின் செல்போன்களில் ஆபாச படங்கள், உடலுறவு படங்கள், அக்கம் பக்கத்தில் பெண்கள் கோலம் போடுவது, குளியல் அறைக்குள் நுழையும் காட்சி, சில பெண்கள் குளிக்கும் காட்சி, சில பெண்களின் நிர்வாண படங்கள் என ஏராளமான படங்கள் இருந்தது.

இந்த ஆபாச படங்களின் உச்சமாக அவரது தாய் லில்லி, சித்தி முறையான ரீட்டாவையுமே அருவருப்பான கோணங்களில் படம் பிடித்து வைத்துள்ளார். லில்லி, ரீட்டா இருவரும் லெஸ்பியன்கள் போல காட்சிபடுத்தி இந்த படங்கள் இருந்ததாம்.

இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார். எட்வினுடன் பேசிய சில நம்பரில் தாட்சர் தொடர்பு கொண்டபோது அவற்றில் பல எண்கள் வங்கி வாடிக்கையாளர்கள் என தெரியவந்தது.



காமப்பேயாக உலாவரும் மனித மிருகத்திடம் போய் சிக்கிக்கொண்டோம் என்பதை அறிந்த தாட்சர் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனாலும் எட்வினிடம் இந்த காம கொடூரங்கள் குறைந்தபாடில்லை.

அதைத்தொடர்ந்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் தாட்சர் புகார் செய்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் வாங்க மறுத்தனர்.

இதன்பின், மதுரை ஐகோர்ட்டின் எட்வினின் ஆபாச படங்களை காட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி எட்வின் உட்பட 5 பேர் மீது வரதட்சணை கேட்டு மிரட்டல் 498 (ஏ), கொலை செய்வதாக அச்சுறுத்தல் 506(1), ஆபாசமாக படம் பிடித்தல் 506 (2), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு (உமன் ஹராஸ்மென்ட் ஆக்ட்) ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

விராலிமலை வங்கியில் எட்வின் ஜெயக்குமார் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

வங்கிக்கு பணம் எடுக்க, செலுத்தி வரும் பெண்களில் அழகான பெண் வாடிக்கையாளர்களின் பாஸ் புத்தகத்தில் உள்ள செல்போன் எண்களை எட்வின் குறித்து வைத்து கொள்வார். பின்னர், இரவு வீட்டுக்கு வந்தபின் அந்த பெண்களின் செல்போன்களுக்கு ஆபாச தகவல்களை எஸ். எம். எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்புவார்.

இதில் பதில் வரும் எண்களுக்கு மீண்டும் வாட்ஸ்அப்பில் பெண்களை மயக்கும் வகையில் பதில் அனுப்புவாராம். இப்படி பல பெண்களை தனது வலையில் எட்வின் வீழ்த்தியுள்ளார்.   அப்படி சிக்கிய வசதியான பெண்களிடம் பணமும் பறித்துள்ளார்.

எட்வின் வேலைபார்த்த வங்கியில் ஒப்பந்த ஊழியராக தேவி பிலோமினாவும் (எட்வினின் கள்ளக்காதலி) என்பவரும் பணியாற்றி உள்ளார்.

அவரும் தற்போது வேலைக்கு வரவில்லை.

அவருக்கும் எட்வின் காமசேட்டையில் தொடர்பு இருந்துள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. எனவே எட்வின் பணியாற்றிய வங்கி கிளையில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஐகோர்ட் உத்தரவுபடி வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்த தகவல் கிடைத்ததும் எட்வினும் அவரது தாயாரும், ரீட்டாவும் தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையே இவர்கள் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற ஏற்பாடு செய்து வருகிறார்கள்.


.

மூலக்கதை