பைக் ரேஸ் பிரச்னையில் முன்விரோதம் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பைக் ரேஸ் பிரச்னையில் முன்விரோதம் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது

ஆலந்தூர்: பைக் ரேஸ் பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் ஜமால் (19). இவர் தனியார் கல்லூரி மாணவர்.

இவருக்கும் ஆதம்பாக்கம், நெருப்புமேடு பகுதியை சேர்ந்த காணிக்கைராஜ் (20), பிரபாகரன் (19), சார்லஸ் (20) ஆகியோருக்கும் இடையே பைக் ரேஸ் ஓட்டியதில் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஆதம்பாக்கம், கரிகாலன் தெரு வழியாக ஜமால் பைக்கில் சென்றபோது காணிக்கைராஜ், சார்லஸ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் ஜமாலை வழிமறித்து சரமாரி தாக்கியதுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த ஜமாலை அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து காணிக்கைராஜ், பிரபாகரன் ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர்.

சார்லசை தேடி வருகின்றனர்.

.

மூலக்கதை