மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக திருவள்ளூருக்கு 8ம் தேதி வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக கூட்டம் தீர்மானம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தி. ப. கண்ணன் தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பி. ஜெயபால், ஆர். விஜயலட்சுமி ராமமூர்த்தி, கமாண்டோ ஏ. பாஸ்கரன், எம். பொம்மி, நகர செயலாளர் கந்தசாமி வரவேற்றனர்.
அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், பி. எம். நரசிம்மன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா, பேரவை இணை செயலாளர் செவ்வை எம். சம்பத்குமார், பேரவை மாவட்ட செயலாளர் இரா. மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் பி. ரவிச்சந்திரன், புட்லூர் சந்திரசேகர், கந்தசாமி, காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு, சுதாகர், சக்திவேல், மோகனவடிவேல், கார்மேகம், பிரகாஷ்,
மற்றும் நிர்வாகிகள் பரிமேலழகர், வேலஞ்சேரி சந்திரன், பொன்னுதுரை, ஜீவா சுப்பிரமணி, வெங்கட்ரமணா, பானுபிரசாத், ராகேஷ், ஜாவித் அகமது, ரவிச்சந்திரன், வக்கீல் சீதாராமன், நேமம் ராகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மாவட்டம் முழுவதும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது, மார்ச் 8ம் தேதி திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தரும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
முடிவில் நேஷன் நன்றி கூறினார்.
.