ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஏர்செல்மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.

மூலக்கதை