புல்வாமா மாவட்டத்தில் நேற்றிரவு 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தில் நேற்றிரவு அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்மாவட்டத்தின் டிரால் பகுதியில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு மோதல் ஏற்பட்டது.
அப்போது, அடையாளம் தெரியாத மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் ேதடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
.