புறநகர் ரயில்கள் ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரக்கோணம்- திருத்தணி இடையே 18, 19, 20, 22 ஆகிய தேதிகளில் காலை 4. 05, 5. 05 மணிக்கும், திருத்தணி- அரக்கோணம் இடையே இன்று மற்றும் பிப்ரவரி 19,21 ஆகிய தேதிகளில் இரவு 11. 15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மூர்மார்க்கெட்-திருத்தணி இடையே 18, 19, 20, 22 ஆகிய தேதிகளில் காலை 3. 50 மணிக்கு இயக்கப்படும் ரயில் அரக்கோணம்-திருத்தணி இடையேயும், திருத்தணி- மூர்மார்க்கெட் இடையே 18, 19, 20, 22 ஆகிய தேதிகளில் காலை 4. 40, 6. 30 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருத்தணி- அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை