கொண்டக்கரையில் போக்குவரத்து சிக்னல்: உதவி கண்காணிப்பாளர் திறந்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொண்டக்கரையில் போக்குவரத்து சிக்னல்: உதவி கண்காணிப்பாளர் திறந்தார்

பொன்னேரி: மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலை கொண்டக்கரை ஊராட்சியில் வெள்ளிவாயல், கவுண்டர்பாளையம், குருவிமேடு ஆகிய பகுதிகளை இணைக்கும் சந்திப்பு உள்ளது. இவ்வழியாக கண்டெய்னர், டேங்கர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வேகமாக செல்கிறது.

இதனால் விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு கொண்டக்கரை ஊராட்சி தலைவர் மனோகரன் ஏற்பாட்டில் தனியார் நிறுவன உதவியுடன் வாகன போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இதன் தொடக்க விழா நேற்று நடந்தது.

பொன்னேரி உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, சிக்னல் விளக்குகளை தொடங்கி வைத்தார்.

பொன்னேரி டிஎஸ்பி (பொறுப்பு) ஆதர்ஷ் சசேரோ, மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மதியரசன், தனியார் நிறுவன அதிகாரி விஸ்வநாதன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அரிகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

.

மூலக்கதை