தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ88 உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ88 உயர்வு

சென்னை: கடந்த ஒருவாரமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில் இன்று காலை சவரனுக்கு ரூ88 உயர்ந்து ஒரு சவரன் ரூ31,304க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக நிலையில்லாத தன்மை காணப்படுகிறது.

மாதத்தில் சில நாட்கள் குறைந்தும்,  பல நாட்களில் விலை அதிகரித்த வண்ணமும் உள்ளது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி 22 காரட் தங்கம் கிராம் ரூ3,832க்கும், ஒரு சவரன்  தங்கம் 30,896க்கும் விற்பனையானது.

இந்நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றம்கண்டு வந்தது. தங்கத்தின் விலை பிப்ரவரி 15ம் தேதி, அதிகபட்சமாக உயர்ந்து சவரன் 31,392 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் நேற்று சற்றே விலை குறைந்து  ஒரு கிராம் ரூ3,902க்கும் சவரன் ரூ31,216க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று காலை  சவரனுக்கு ரூ88 உயர்ந்து ரூ31,304க்கும் கிராம் ரூ3,913க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு நகை வாங்க திட்டமிட்டுள்ள பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதே நிலை தொடரும்பட்சத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை தொடர வாய்ப்புள்ளது.

அரசின் வரிகள், செய்கூலி, சேதாரம் சேர்த்து தங்கத்தின் விற்பனை விலை ரூ40 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளது.

.

மூலக்கதை