ப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் கொலை மிரட்டல்: போலீசில் புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் கொலை மிரட்டல்: போலீசில் புகார்

காரைக்குடி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காரைக்குடி போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் மத்திய நிதியமைச்சராகவும் இருந்தவர் ப. சிதம்பரம். இவரது மகன் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை எம்பியாக உள்ளார்.

இருவருக்கும் ட்வீட்டரில் ராமநாதன் என்பவர், ‘‘அப்பா, மகன் இருவருக்கும் மரணம் நெருங்கி விட்டது’’ என பதிவிட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கேதன் மண்டல ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

மனுவில், ‘‘ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு ட்வீட்டரில் ராமநாதன் என்பவர், கொலை மிரட்டல் விடுத்து பதிவிட்டதுடன், இருவருக்கும் அதை இணைத்துள்ளார். இதன் மூலம் அவர், இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக தெரிகிறது.

எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரை இயக்கும் தீவிரவாத சக்திகளை கண்டுபிடித்து அவர்களையும் கைது செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை