பைக்குகள் மோதி விபத்து: 3 வாலிபர்கள் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பைக்குகள் மோதி விபத்து: 3 வாலிபர்கள் பலி

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (23), ஆனந்தகுமார் (23). கூலித்தொழிலாளர்கள்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் மீனாட்சிபுரம் செல்வதற்காக பைக்கில் ஒன்றாக புறப்பட்டனர். மீன்கரைரோடு பூச்சனாரி அருகே வேகமாக வரும்போது, எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பைக்கில் சென்றவர்களும் தூக்கி வீசப்பட்டு ரோட்டில் விழுந்தனர். இதில், ஆனந்தகுமார் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த கார்த்திகேயன் (17) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

தகவலறிந்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை போலீசார், அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  கார்த்திக் மற்றும் அசோக்மணி (18) ஆகியோரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கார்த்திக், அசோக்மணி இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் அசோக்மணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை