ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்; முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராணுவத்தில் பெண்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர்.இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்; குடும்பப் பராமரிப்பில் பெண்களின் பங்கு மிகவும் பெரியது. ராணுவத்தில் அவர்களுக்கு ஆபத்து அதிகமாகவே உள்ளது. கிராமப்புற பின்னணியில் இருந்தே பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சேர்கிறாரக்ள். தற்போதைய சமூக நடைமுறைக்கு ஏற்றறவாறு, பெண்களை தளபதிகளாக ஏற்றுக் கொள்ள மனதளவில் இன்னும் தயாராகவில்லை என்று கூறியது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவி வழங்கவேண்டும். ராணுவத்தில் பெண்களை நியமிப்பதற்கான உத்தரவை நிரந்தரமாக வேண்டும். மேலும் பெண்களுக்கு ராணுவத்தில் சமத்துவம் வழங்க மறுக்கும் மத்திய அரசின் வாதத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை