இந்தி டப்பிங் உரிமத்தில் மோசடி: தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

தினமலர்  தினமலர்
இந்தி டப்பிங் உரிமத்தில் மோசடி: தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

தமிழ் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடும் உரிமம் தொடர்பான விஷயங்களில் பெரும் மோசடி நடப்பதாக வாடீல், காவியன், ஐங்கரன், 1945 படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். 1954 படத்தின் தயாரிப்பாளர் ராஜராஜன் போலீஸ் கமிஷனர் அலுவலத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

சுனில் ஜெயின் மற்றும் சுரபி மோகன் என்ற இருவர் மீது அவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். அப்பாவி தயாரிப்பாளர்களின் அறியாமையை பயன்படுத்தி இவர்கள் பணம் சம்பாதித்து வந்திருப்பதாக தயாரிப்பாளர்கள் தங்கள் புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்கள்.

மூலக்கதை