இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி

தினமலர்  தினமலர்
இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி

புதுடில்லி:இந்தியாவின், இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற இடத்தை, ராதாகிஷன் தமானி பிடித்துள்ளார்.


‘அவென்யூ சூப்பர் மார்க்கெட்’ நிறுவனத்தின் நிறுவனரும், ‘டிமார்ட்’ உரிமையாளருமான, ராதாகிஷன் தமானியின் சொத்து மதிப்பு, 1.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, ‘போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்ஸ் இண்டக்ஸ்’ தெரிவித்துள்ளது.இதையடுத்து, முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார், ராதாகிஷன் தமானி.


அவென்யூ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் பங்கு விலை, 2,559 ரூபாயாக கடந்த, 13ம் தேதியன்று அதிகரித்ததை அடுத்து, தமானியின் சொத்து மதிப்பும் அதிகரித்தது.கடந்த, 2002ம் ஆண்டில், மும்பையில் துவங்கப்பட்ட டிமார்ட், தற்போது, 2018ம் ஆண்டு நிறுவன அறிக்கையின்படி, 12 மாநிலங்களில், 176 ஸ்டோர்களுடன் வளர்ச்சியடைந்துள்ளது.கடந்த நிதியாண்டில், அவென்யூ சூப்பர் மார்க்கெட் வருவாய், 19 ஆயிரத்து, 916 கோடி ரூபாய்.

மூலக்கதை