நிர்பயா தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மயங்கி விழுந்தார் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி
டெல்லி : நிர்பயா தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த நீதிபதி பானுமதிக்கு மருத்துவக் குழு முதலுதவி வழங்கியது. இதனால் நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை பிப். 20-க்கு ஒத்திவைக்கப்பட்டது.