கன்னடத்தில் கால்பதிக்கும் விஜய் மில்டன்

தினமலர்  தினமலர்
கன்னடத்தில் கால்பதிக்கும் விஜய் மில்டன்

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், ‛அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெறாததால் அதன்பிறகு அவர் படம் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கிய ‛கோலிசோடா' படம் பெரிய வெற்றி பெற்றது. அதனால் மீண்டும் படங்களை இயக்க ஆரம்பித்தார். ஆனால் கோலிசோடாவுக்கு பிறகு அவர் இயக்கிய பத்து எண்றதுக்குள்ள, கடுகு, கோலி சோடா 2 படங்கள் வெற்றிபெறவில்லை. இதனால் மீண்டும் ஒளிப்பதிவுக்கு திரும்பி விட்டார்.

தற்போது கன்னடத்தில் பொகரு என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதில் துருவ் சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்கள், நந்த கிஷோர் இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். சிவராஜ்குமாரை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் விஜய் மில்டன். சிவராஜ்குமாரும் கதையில் இம்ப்ரசாகி நானே தயாரிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறாராம். விஜய் மில்டன் இயக்கும் படம் சிவராஜ்குமாரின் 124வது படம்.

மூலக்கதை