திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் இல்லாவிட்டாலும் ரூ.200 க்கு ஒரு மெகா சைஸ் லட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் இல்லாவிட்டாலும் ரூ.200 க்கு ஒரு மெகா சைஸ் லட்டு

திருமலை: திருப்பதி கோயிலில் சிபாரிசு கடிதம் இல்லாமல் வந்தாலும் 200 ரூபாய்க்கு ஒரு பெரிய லட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் கல்யாண உற்சவ சேவை நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 பெரிய லட்டுகள், 2 வடை  மற்றும் 5 சிறிய லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சிறிய லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது.

கல்யாண உற்சவத்தில் மட்டும்  பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்க கூடிய பெரிய லட்டுகள் சிபாரிசு கடிதத்தின் மூலம் ₹200 கட்டணத்தில் கோயிலுக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் எந்தவித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் நேரடியாக கோயிலுக்கு வெளியே உள்ள லட்டு கவுன்டரில் ₹200 கட்டணம் செலுத்தி பெரிய  லட்டுகளை பெறுவதற்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சோதனை முறையில் நேற்று 10 ஆயிரம் பெரிய லட்டுகளை இருப்பு வைத்து ₹200  கட்டணத்தில் விற்பனை செய்தனர்.

ஏற்கனவே சலுகை விலையில் 4 லட்டுகள் ₹70க்கு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் எத்தனை சிறிய லட்டுகள்  வேண்டுமென்றாலும் ஒரு லட்டு ₹50 கட்டணத்தில் கோயிலுக்கு வெளியே உள்ள கவுன்டரில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

.

மூலக்கதை