மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் ‘மராத்தி’ கட்டாயம்: புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் ‘மராத்தி’ கட்டாயம்: புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு

மும்பை: அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயமாக்குவது தொடர்பாக புதிய சட்டம் இயற்ற உள்ளதாக, மகாராஷ்டிரா கைத்தொழில் மற்றும் மராத்தி மொழி அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநில அரசு அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது முக்கியமான ஒரு சட்டத்தை இயற்ற உள்ளது.

அதாவது, மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியைக் கற்பிப்பதை கட்டாயமாக்குகிறது. இது தொடர்பான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும்மராத்தி மொழி அமைச்சராக இருக்கும் சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாய் தெரிவித்தார்.

முன்னதாக, மும்பை மராத்தி பத்ராகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘மாநில சட்டமன்றத்தின் அடுத்த கூட்டம் பிப்ரவரியில் நடைபெறும்.

அடுத்த மாத சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசாங்கம் ஒரு சட்டத்தை உருவாக்கும். அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மராத்தி மொழியைக் கற்பிப்பது கட்டாயமாக்கப்படும்.

மாநிலத்தில் 25,000 ஆங்கிலவழி நடுத்தர பள்ளிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மேலும், ஆங்கிலவழி பள்ளிகளில் மராத்தி கற்பிக்கப்படுவதில்லை. விருப்ப பாடமாக மட்டுமே வைக்கப்படுகிறது.



இனிமேல், அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கற்பித்தல் கட்டாயமாக்கப்படும். மராத்தி மொழியில் அனைத்து வணிகங்களையும் மேற்கொள்ள அரசாங்கம் விரும்புகிறது.

மராத்தி மொழியில் குறிப்புகள் இல்லாமல் அரசின் கோப்புகளை அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்படாது’’ என்றார்.

.

மூலக்கதை