பெண் தர மறுப்பு: மைனர் பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண் தர மறுப்பு: மைனர் பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே அக்கியம்பட்டி ஊராட்சி சீகம்பட்டியை சேர்ந்தவர் பழனிகுமார். இவர் சில நாட்களுக்கும் முன் அப்பகுதியை சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவரது வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார்.

இதற்கு பெண்ணின் பெற்றோர், ‘’ பெண்ணுக்கு திருமண வயது ஆகவில்லை. எனவே, கொஞ்சநாள் கழித்து பார்க்கலாம்’’ என்று கூறியதாக தெரிகிறது.

இது பழனிகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மைனர் பெண் திடீரென மாயமானார்.

அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் பெண்ணின் பெற்றோர், துவரங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

அதில், ‘’பெண் கேட்டு தராததால் பழனிகுமார், அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து என் மகளை கடத்தி சென்றுவிட்டதாக சந்தேகப்படுகிறோம். மகளை கண்டுபிடித்து தர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை