மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், தருமபுரி மாவட்டம் தேமுதிக ஏரியூர் ஒன்றியச் செயலாளர் கே. ஏ. சரவணன் தலைமையில் ஏரியூர் ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 76 கிளைச் செயலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் நேற்று தேமுதிகவிலிருந்து விலகி தி. மு. க. வில் இணைந்தனர்.



இதேபோல், பாமக ஏரியூர் தெற்கு ஒன்றிய முன்னாள் தலைவர் கெண்டையன அள்ளி, முன்னாள் கவுன்சிலர் கே. ஏ. குமார், மஞ்சார அள்ளி முன்னாள் கவுன்சிலர் வீரப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், தருமபுரி மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ரமணி, எம். எல். ஏ, எஸ். ஆர். பார்த்திபன் எம். பி, பி. என். பி. இன்பசேகரன் எம். எல். ஏ, தருமபுரி மாவட்டப் பொருளாளர் தர்மசெல்வன், பென்னாகரம் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், ஏரியூர் ஒன்றியச் செயலாளர் என். செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

.

மூலக்கதை