செங்கல்பட்டு அருகே காப்பு காட்டில் தீ
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காப்பு காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
செங்கல்பட்டு அருகே வேதநாராயணபுரத்தில் காப்பு காடு உள்ளது. இதன் அருகே குப்பைகள் மலைபோல கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 10 மணியளவில் திடீரென, இந்த குப்பையில் தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
காப்பு காட்டிலும் தீ பரவியது.
குபுகுபுவென வெளியேறிய கரும்புகையால் அருகில் இருந்த கிராம மக்கள் தவித்தனர். தகவல் அறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனால் 500 ஏக்கரில் காப்பு காடு தப்பியது.