மார்ச் 31ம் தேதி வரை சென்னை-கோவை இடையே ஏசி சிறப்பு கட்டண ரயில்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மார்ச் 31ம் தேதி வரை சென்னைகோவை இடையே ஏசி சிறப்பு கட்டண ரயில்

சென்னை: சென்னையிலிருந்து கோவைக்கு மார்ச் 31ம் தேதி வரை ஏசி சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சென்னை - கோவை வழித்தடத்தில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு வரும் 24ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை ஏசி சிறப்பு கட்டண ரயில்  இயக்கப்பட உள்ளது.

கோவையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 12. 45 மணிக்கு சென்னை வந்தடையும். மறு மார்க்கத்தில்  சென்னையிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு ேகாவை சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு,  திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


.

மூலக்கதை