வங்கிக் கடனை அடைக்க முடியவில்லை விவசாயி தூக்கிட்டு தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கிக் கடனை அடைக்க முடியவில்லை விவசாயி தூக்கிட்டு தற்கொலை

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் வகோடி கிராமத்தை சேர்ந்த விவசாயி அருண் குஷால் கன்ஹோங்கர் (65). இவர், நேற்று தனது வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த சானர் போலீசார்  குஷால் கன்ஹோங்கரின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து நடத்திய  விசாரணையில், ஏழு ஏக்கர் விவசாய நிலத்தின் உரிமையாளரான கன்ஹோங்கர், 2016-17ம் ஆண்டில் சோனெர் தெஹ்ஸிலில் உள்ள ஒரு தேசிய  வங்கியிடமிருந்து ரூ. 1. 70 லட்சம் கடன் வாங்கி உள்ளார். விவசாயத்தில் ஏற்பட்ட பெரும் இழப்பு காரணமாக, அவரால் கடனை அடைக்க  முடியவில்லை.



கடன் தவணை செலுத்த, தன்னிடம் இருந்த நகைகளை உள்ளூர் பணக்காரரிடம் அடமானம் வைத்திருந்தார். ஆனால் அவரது கடன்  பிரச்னைகள் தீரவில்லை.

கடன் கொடுத்தவரிடமிருந்து நகைகளை திரும்பப் பெற முடியாததால், கடந்த ஒரு வாரமாக விவசாயி மன அழுத்தத்தில்  இருந்துள்ளார், அவரது குடும்ப உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார்  தெரிவித்தனர்.

.

மூலக்கதை