இந்தியா முழுவதும் ஜூன்-1.ம் தேதிக்குள் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

தினகரன்  தினகரன்
இந்தியா முழுவதும் ஜூன்1.ம் தேதிக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

டெல்லி: இந்தியா முழுவதும் ஜூன்-1.ம் தேதிக்குள் \'ஒரே நாடு ஒரே ரேஷன்\' திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். இதனடிப்படையில் பயனாளிகள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்களை வாங்க முடியும். பயனாளர்கள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நியாயவிலை கடையிலும் ரேஷன் அட்டை மூலம் வாங்கி கொள்ளும் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.அதன்படி,  ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள பி.ஓ.எஸ் கருவிகளுடன் இணைத்த பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே 16 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இதில் 12 மாநிலங்களில் ஜூன் 1 முதல் இத்திட்டம் முழுமையாக அமுலுக்கு வருகிறது.ஆந்திரா, ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா, திரிபுரா, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் முழுமையாக அமுலுக்கு வருகிறது. பீகார், உ.பி. ஒடிஷா மற்றும் சத்தீஸ்கரில் சில பகுதிகளில் இத்திட்டம் செயல்படுகிறது. இங்கும் முழுமையாக இத்திட்டம் செயல்படும். 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 35 கோடி பயனாளிகள் இத்திட்டத்தால் பயனடைவர். மேலும் 8 மாநிலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மூலக்கதை