சுர்ஜேவாலாவின் தந்தையான காங். மூத்த தலைவர் மரணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுர்ஜேவாலாவின் தந்தையான காங். மூத்த தலைவர் மரணம்

சண்டிகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவின் தந்தையான ஷம்ஷர் சிங் சுர்ஜேவாலா இன்று காலமானார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஷம்ஷர் சிங் சுர்ஜேவாலா (87), பல மாதமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.

இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவின் தந்தையாவார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அங்கு ஷம்ஷர் சிங் சுர்ஜேவாலா இறுதி மூச்சு விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷம்ஷர்சிங் சுர்ஜேவாலா, ஐந்து முறை எம். எல். ஏவாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்பியாகவும்,

அரியானா மாநில காங்கிரசின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தார். மேலும், அரியானா கிருஷக் சமாஜின் தலைவராக இருந்த அவர் விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடினார்.

இன்று மாலை ஷம்ஷர் சிங் சுர்ஜேவாலாவின் தகனம் அரியானாவின் நர்வானாவில் நடைபெறும் என்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

.

மூலக்கதை