காவல் சீருடையில் இருந்த பெண் நக்சல் சுட்டுக் கொலை: சட்டீஸ்கரில் அதிரடி நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காவல் சீருடையில் இருந்த பெண் நக்சல் சுட்டுக் கொலை: சட்டீஸ்கரில் அதிரடி நடவடிக்கை

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தின் தேல்குடெம்-பசகுடா மலைப் பகுதிகளில் சிஆர்பிஎஃப் தலைமையிலான பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஒரு பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிஆர்பிஎப்பின் 168வது பட்டாலியன், அதன் 204வது கோப்ரா பட்டாலியனின் ஒரு பிரிவு மற்றும் மாநில காவல்துறையினர் மலைப்பகுதியில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

பாதுகாப்பு படையினர் போன்று சீருடை அணிந்த பெண் மாவோயிஸ்ட்டின் உடல் மற்றும் மூன்று துப்பாக்கிகள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை