வீட்டில் சிறுத்தை பதுங்கல்: தெலங்கானாவில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீட்டில் சிறுத்தை பதுங்கல்: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாட்நகர் படேல் சாலை அருகே காம்மதனம் வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர்.

இந்த நிலையில், ஷாட்நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சிறுத்தை  பதுங்கியிருப்பதாக ஷாட்நகர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷாட்நகர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் சிறுத்தை பிடிபடவில்லை.

தொடர்ந்து அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

.

மூலக்கதை