நடிகைகளில் நான் ஸ்பெஷல்: அமலாபால்

தினமலர்  தினமலர்
நடிகைகளில் நான் ஸ்பெஷல்: அமலாபால்

அமலாபால், தனி ஹீரோயினாக நடித்துள்ள படம் ‛அதோ அந்த பறவை போல'. காட்டுக்குள் தனியாக மாட்டிக் கொள்ளும் ஒரு பெண், அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்கிற கதை. அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். ஜோன்ஸ் தயாரித்துள்ளார். படம் விரைவில் வெளிவர இருக்கிறது. படம் பற்றி அமலாபால் கூறியதாவது:

ஒரு இளம் பெண் எந்த உதவியுமே இல்லாமல் தனி ஆளாக காட்டில் மாட்டிக் கொண்ட பிறகு அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறார் என்பது தான் படம். இன்றைக்கு நாடு இருக்கும் நிலையில் பெண்கள் பாதுகாப்பு என்பது பெரும் விவாதமாக உள்ளது. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வருவது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.

இப்படத்திற்காக 'கிராமகா' என்னும் தற்காப்பு கலையை கற்றேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் உடன் சண்டை போட்டுள்ளேன். இப்படத்திற்காக நான் கற்றுக் கொண்ட தற்காப்பு கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள், நான் ஸ்பெஷலானவள் என்றார்.

மூலக்கதை