மாத்தறையில் கோர விபத்து! 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்

TAMIL CNN  TAMIL CNN
மாத்தறையில் கோர விபத்து! 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் ஒன்று மாத்தறை திஸ்ஸ வீதியின் ரன்ன பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளமையால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   The post மாத்தறையில் கோர விபத்து! 5 பேர் பலி; 15 பேர் படுகாயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை