கணவரை பிரிந்து வாழும் பெண்ணிடம் மேட்ரிமோனி இணையதளம் மூலம் ரூ.27 லட்சம் சுருட்டல்; 2 பேர் கைது
சென்னை: மேட்ரிமோனி இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணிடம் ரூ.27 லட்சத்தை சுருட்டியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரை பிரிந்து வாழும் உமாராணியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.27 லட்சம் வாங்கியதாக ராஜசிம்மநாயுடு என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது. உமாராணி(42) என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ராஜசிம்ம நாயுடுவை போலீஸ் விசாரணை செய்து வருகிறது.