துபாய் விமானநிலையத்தில் தவித்த அதர்வா

தினமலர்  தினமலர்
துபாய் விமானநிலையத்தில் தவித்த அதர்வா

துபாயில் கனமழை பெய்து வருவதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில், நடிகர் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டார், அதர்வா.

விமானப்பயணத்தின் இடையே கனமழையால் துபாயில் சிக்கினார். அதிக மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தங்கியிருந்துள்ளார். அதன் பிறகு நேற்று விமான சேவை தொடங்கியது. இதனையடுத்து அசர்பைஜான் சென்றார்.

மூலக்கதை