ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தபோது ஆயுதங்களை கடத்த முயற்சித்த தீவிரவாதிகள்...விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சென்னை: காவல் உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தபோது தீவிரவாதிகள் ஆயுதங்களை கடத்த முயற்சி செய்துள்ளனர் என்று பெங்களூருவில் பிடிபட்ட தெளபிக், அப்துல் சமீம் ஆகியோரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சோதனை சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் தடுத்ததால் தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.